குத்தாலம் தாலூக்கா.
சேத்திரபாலபுரம் கிராமத்தில் காவிரி படுகையில் 2 நாட்களாக மணல் கொள்ளை..
அத்துமீறி, அனுமதியின்றி காவிரி ஆற்றின் கரையின் அருகே 100 கணக்கான லாரிகள் மூலம் மணல் கொள்ளை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது.சேத்திரபாலபுரம் கிராமத்தில் மட்டும் 10 த்திற்கும் மேற்பட்ட ONGC எண்ணெய் கிணறு உள்ளது.

மேலும் ONGC நிறுவனத்தால் பல நூற்றுக்கணக்கான அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலத்தடி நீர் இப்போது இந்த மணல் கொள்ளையால் இன்னும் அதிகமாக பாதிக்கப்படும், இந்த இரண்டு நாட்களாக சேத்திரபாலபுரம் கடலங்குடி சாலை முற்றிலும் சேதமடைந்துவிட்டதால் உடனடியாக ஆட்சியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கோரிக்கை வைக்கின்றனர் பகுதி மக்கள். மேலும் இந்த மணல் திருட்டுக்கு திமுகவைச் சேர்ந்த மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் காரணம் என குற்றச்சாட்டையும் வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
செய்தி – தமிழ்