Tuesday, June 3, 2025
No menu items!
HomeUncategorizedதுரை மார்டன் பள்ளி (சிபிஎஸ்இ)யில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது

துரை மார்டன் பள்ளி (சிபிஎஸ்இ)யில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, ஜெகதேவி அடுத்த தண்ணீர்பள்ளத்தில் இயங்கி வரும் துரை மாடர்ன் பள்ளி (சிபிஎஸ்இ)யில் முப்பெரும் விழா நடைபெற்றது அதில் மழலைய மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழா நடைபெற்றது மற்றும் தாத்தா பாட்டி தினம் கொண்டாடப்பட்டது அதில் தாத்தா பாட்டிக்கு விளையாட்டு போட்டி வைத்து வெற்றி பெற்ற தாத்தா பாட்டிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் விளையாட்டு ஆண்டு விழா கொண்டாடப்பட்டு அதில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கி பாராட்டினார்கள்
அதில் பள்ளி நிர்வாக இயக்குனர் சிந்து வரவேற்புரை ஆற்றினார் மற்றும் இவ்விழாவிற்கு பள்ளி நிறுவனர் து.மணி அவர்கள் தலைமை தாங்கினார்
மற்றும் பள்ளி தாளாளர் ம.சத்தியமூர்த்தி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார் அதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் எ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்
பள்ளி தலைமை ஆசிரியர் இ.ரவிந்தர் அவர்கள் விழாவினை தொகுத்து வழங்கினார்
விழா ஏற்பாடுகளை ஆசிரியை ஆசிரியர்கள் செய்தனர்.
இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட தாத்தா பாட்டிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் ஆசிரியர் காயத்ரி நன்றி உரை கூறினார்

கிருஷ்ணகிரி செய்தியாளர் மு.நந்த குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version