Saturday, June 28, 2025
No menu items!
HomeUncategorizedசெந்துறை அரசுமுழு நேர நூலகத்தில் முதல் கொடையாளரான அமைச்சர்.

செந்துறை அரசுமுழு நேர நூலகத்தில் முதல் கொடையாளரான அமைச்சர்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அரசு முழு நேர நூலகத்தின் முதல் கொடையாளராக தன்னை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெள்ளியன்று ( 27.06.25) அன்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள செந்துறை வந்தவர் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பாக போட்டித்தேர்வு மாணவ மாணவிகள் பயனடையும் வகையில் ரூ. 55,000.00 மதிப்புடைய புத்தங்களை அரசு நூலகத்திற்கு கொடையாக அளித்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மாணவ மாணவிகளுக்கு போட்டி தேர்வு புத்தகங்களை வழங்கி நூலகங்களை நன்கு பயன்படுத்திக்கொண்டு அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு சேவையாற்ற வாழ்த்துகளை கூறினார்.மேலும் 1981 முதல் கிளை நூலகமாக செயல்பட தொடங்கி 20/08/2008 முதல் முதல் முழு நேர நூலகமாக உயர்வு பெற்ற இந்நூலகத்தில் வாசகர்கள், புரவலர்கள், பெரும் புரவலர்கள் என இருந்த போதிலும் கொடையாளர்கள் என நாற்பத்தி நான்கு ஆண்டுகளில் யாரும் இல்லை இதை அமைச்சரின் கவனத்திற்கு விழா குழுவினர் கொண்டு செல்ல


செந்துறை அரசு முழு நேர நூலகத்தின் முதல் கொடையாளராக தன்னை இணைத்துக்கொண்டு அதற்குரிய தொகையான ரூ பத்தாயிரத்தை வழங்கினார். இந்நிகழ்சியில் மாவட்ட நூலக அலுவலர் இரா.வேல்முருகன் , வாசகர் வட்டத்தினர், முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக சொந்த இடத்தில் பழைய கட்டிடத்தை அகற்றி புதிய நூலக கட்டிட பணியினை விரைந்து துவக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version