புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் சுகந்த பரமலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள இந்த கோயில் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் நேற்று இரவு வழக்கம் போல் பூஜையை முடித்த பூசாரிகள் கோயில் பூஜையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்குள்ள காவலாளிகள் கதவை பூட்டிவிட்டு கோயிலுக்கு வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து உறங்கி உள்ளனர்.

அப்போது நள்ளிரவில் கோயிலுக்குள் சத்தம் கேட்டபோது அங்கு படுத்து உறங்கிய காவலாளி அருகே இருந்த மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு சத்தம் போட்ட வாரே சென்று கோயிலின் உல் பக்க கதவை திறந்து பார்த்த போது கோயில் மற்றொருபுறம் உள்ள மரக்கதவு கோயில் கருவறை கதவு அதில் போடப்பட்டுள்ள இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த கேமரா காட்சிகள் பதிவாக கூடிய ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கோயிலில் உள்ள வேறு எந்த பொருட்களும் திருடு போகாத நிலையில் இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே போன்று இரண்டு முறை இந்த கோயிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.