கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றிய கமிட்டி உச்சனப்பள்ளி கிளையில் மே தின கொடியேற்று விழா மே 1 அன்று நடைபெற்றது. கட்சிக் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் ஏற்றி வைத்தார். விவசாய சங்கத்தின் கொடியை மூத்த தோழர் ஆர்.நாகராஜ் ஏற்றி வைத்தார், வாலிபர் சங்க கொடியை முன்னாள் மாவட்ட தலைவரும் மாவட்ட குழு உறுப்பினருமான அருமப்பா ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்