தமிழகம் முழுவதும் போதை பொருட்களை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் மளிகை மற்றும் பெட்டிகடைகளில் புகையிலை குட்கா பொருட்களுக்கான சோதனைகள் தொடர்ந்து நடைப்பெற்றுவருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பவர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக 40 கிலோ அளவில் வைத்திருந்ததை காவல்துறையினர் சோதனையில் தெரியவந்ததையடுத்து சம்பந்தப்பட்ட தங்கராசுவிடம் குட்கா பொருட்களை பறிமுதல்செய்து வழக்கு பதிந்தனர் மேலும் விசாரணையையடுத்து சிறைக்கு அனுப்பினர்.
எம்.எஸ்.மதுக்குமார்.

