Sunday, May 18, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedகிருஷ்ணகிரி மாற்று திறனாளி மாணவன் +2 தேர்வில் சாதனை

கிருஷ்ணகிரி மாற்று திறனாளி மாணவன் +2 தேர்வில் சாதனை

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி அடுத்த ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி வர்மா, 18. இவர், குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சிறுவயதில் ஏற்பட்ட மின் விபத்தில், இவரது இரு கைகளும் முழங்கை அளவில் எடுக்கப்பட்டது. கைகள் இல்லாத நிலையில் படிப்பு, ஓவியத்தில் ஆர்வம் மிகுந்து இருந்தார். பத்தாம் வகுப்பு தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தற்போது பிளஸ் 2 தேர்வில் சொல்வதை கேட்டு எழுதும் நபர் உதவியுடன் தேர்வெழுதி, 471 மதிப்பெண்கள் பெற்றார். கீர்த்தி வர்மா தன் தாய் கஸ்தூரி அவர்களை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன். அவர்கள் சந்தித்து பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவத்து தனது வாழ்த்துக்கள் தெரிவித்து ரூ.25,000 நிதியுதவி வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் மு.நந்தகுமார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments