Sunday, May 18, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedகள்ள சந்தையில் கலர் நூல் கண்டு விற்பனை செய்யும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம்....

கள்ள சந்தையில் கலர் நூல் கண்டு விற்பனை செய்யும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம். கண்காணித்து நடவடிக்கை எடுக்கப் படுமா?

திருச்சி மாவட்டத்தில் ரேசன் கடைகளுக்கு பொது மக்கள் பயன்பாட்டிற்கு விலை யில்லா அரிசியும், நியாய விலையில் அரிசியும் வழங்கப் படுகிறது. வழங்கப் படும் அரிசி மூட்டைகளை தைப்பதற்கு ஐந்து வண்ணங்களில் நூல் கண்டு அரசால் ஒரு நூல் கண்டு ரூ.65 க்கு கொள்முதல் செய்யப் படுகிறதாம். ஒரு நூல் கண்டில ஏறக்குறைய 400 மூட்டைகள் தைக்க வேண்டுமாம். ஆனால் 300 மூட்டைதான் தைக்க முடியும் என கணக்குக் காட்டி அந்தந்த குடோன் நிர்வாக அதிகாரி முறைகேடாக கலர் நூல் கண்டை வெளி மார்க்கெட்டில் ரூ 35க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல். இப்படி முறைகேடாக விற்பனை செய்யப்படும் இடங்கள் திருச்சி பாலக்கரை , மற்றும் பீமநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதாம்! இந்த முறைகேடான கள்ள விற்பனையை, கண்காணித்து திருச்சி மாவட்ட நிர்வாகமும், கூட்டுறவு சொசைட்டி பொறுப்பு அதிகாரிகளும், விஜிலென்ஸ் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments