Monday, December 22, 2025
No menu items!
HomeUncategorizedஎதிர்ப்பும், ஆதரவுமாய் முடிந்த சுண்ணாம்புக்கல் குவாரி கருத்து கேட்பு கூட்டம்.

எதிர்ப்பும், ஆதரவுமாய் முடிந்த சுண்ணாம்புக்கல் குவாரி கருத்து கேட்பு கூட்டம்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் 19.12.25 வெள்ளியன்று செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான செந்துறை உஞ்சினி சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் செந்துறை தனியார் மண்டபத்தில்மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (பி) லிட் ஆகியோர்கள் இணைந்து நடத்திய இக்கருத்து கேட்பு கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். இதில் இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் 4D, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின்  நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .பொ.இரத்தினசாமி, தெரிவித்தார்; இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜராஜேஸ்வரி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.மதுக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version