அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர எல்லை அருகே 12.06.26 வெள்ளி மாலை நடைப்பெற்ற நிகழ்வில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் ஜெயங்கொண்டம் அருகே பாஜகவிலிருந்து தங்களை விடிவித்துக்கொள்வதாக அறிவித்து மூத்த நிர்வாகியின் கரங்களால் வாகனங்களில் இருந்த தாமரை சின்னம் பொருந்திய பாஜக கொடியினை அகற்றிய பின்னர்

அண்ணாமலையின் வழியில் தொடர்வோம் , தமிழகத்தில் அனைத்து சமுதாயத்திற்குமான அரசியலை முன்னெடுப்போம், அரியலூர் மாவட்டத்தை அண்ணாமலையின் கோட்டையாக மாற்றுவோம். என்று சபதம் ஏற்றனர். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு “வீ தி லீடர் “என்னும் தன்னார்வ அமைப்பை தொடங்கினார். இதைநடுத்து அண்ணாமலையின் அபிமானிகள், பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் என லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

எம்.எஸ்.மதுக்குமார்.

