தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது அந்த உணவகத்தில் இன்று மதியம் உணவு அருந்திய ஒருவர் சாம்பாரில் பல்லி கிடந்தது என புகார் செய்ய விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரித்த போது சம்பவம் நடைபெற்றது உண்மை எனவும்.

மேலும் அனுமதியின்றி அந்த உணவகம் செயல்படுவதை அறிந்து அந்த உணவகத்தை இழுத்து மூட உத்தரவிட்டனர். மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய உணவகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தஞ்சையை பரபரப்பாக்கி இருக்கிறது.