தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தெய்வபாலனுக்கு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே சாய்ந்துள்ளார். அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்தார்.
கூட்டம் நடைபெறும் போது அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தை பரபரப்பாகியுள்ளது.