திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சைமலை கிராமத்தை சேர்ந்த மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பொதுச்சட்ட நிலையில் தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில்வதற்கு தகுதி பெற்றுள்ள நிகழ்வு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
துறையூர் அருகே அமைந்துள்ள பச்சைமலை தோனுர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்.
கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார் அவரது தந்தை இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் இவரது மூத்த மகன் பரத் (17) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தாய் சுதாவை இழந்த நிலையில் பரத் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார் பரத் தோணுர் அருகே உள்ள சின்ன இலுப்பூரில் உள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த நிலையில் 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 356 மதிப்பெண்கள் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பொதுச்சட்ட நுழைவுத் தேர்வில் தேர்வு எழுதிய பரத் இந்திய அளவில் 964 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது B com LLB (ஹானஸ்ட்) படிப்பில் அனுமதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்