Tuesday, December 2, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புங்கனூர் விவசாயி புகார் மனு .......

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புங்கனூர் விவசாயி புகார் மனு …….

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி புங்கனூர் கீழத்தெருவை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணனிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
எனது பாட்டனார் சின்னையன் பெயரில் தாயனூர் வருவாய் கிராமம் புங்கனூரில் விவசாய நிலம் உள்ளது. இது எங்களுடைய குடும்ப சொத்து அந்த நிலத்தை வருவாய் ஆணையர் என்னுடைய கருத்தை கேட்காமல் வேறு ஒருவரது பெயருக்கு 10 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் செய்துள்ளார். அதனை ரத்து செய்து என் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனு அளித்த போது வயலூர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version