Thursday, March 13, 2025
No menu items!
HomeUncategorizedமோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின்...

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச் சங்கத்தின் மாநில உரிமை கேட்க போராட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் இணைத்து

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நல சங்கத்தின் மாநில தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். முன்னதாக மாநில பொருளாளர் சேகர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து மாநில முதன்மை துணைத் தலைவர் அழகு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மாநில துணைப் பொருளாளர் டேவிட், மாநில முதன்மை செயலாளர் தமிழரசன், மாநில இணைச்செயலாளர் ஷாஜகான், மாநில பொதுச் செயலாளர் ஜமால் முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநிலத் துணைத் தலைவர் ராஜா நன்றி உரையாற்றினார்.

இந்த உரிமை கேட்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக:- மத்திய மாநில அரசுகள் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்து, பழைய நடைமுறை அமல்படுத்த கோரியும், ஆர்டிஓ அலுவலகங்களில் உள்ள நடைமுறையை எளிமைப்படுத்த கோரியும், வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய கோரியும், வாகனம் பெயர் மாற்றம் செய்யும்போது வாகனத்தின் முன்னால் உரிமையாளர் செல் போன் நம்பருக்கு செல்லும் ஓடிபி முறையை தவிர்த்து பழைய நடைமுறையை அமல்படுத்த கோரியும், டிடி கேஸ் அபராத தொகையை முதல் உரிமையாளர் மட்டுமே செலுத்த முடியும் என்பதை மாற்றி அமைக்க கோருவது உள்ளிட்ட மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்ய கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உரிமை கேட்ப போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக முழுவதும் இருந்து மாநில ஆலோசர்கள் மாநில துணைத்தலைவர்கள் மாநிலச் செயலாளர் மாவட்ட கிளை சங்க நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version