கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
ஓசூரில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி. முன்னாள் அமைச்சர் மற்றும் வி பன்னீர்செல்வம் மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிமுக மாணவர் அணி மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற இந்த அஞ்சலி கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான P.பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட பொறுப்பாளரும் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளருமான கலசப்பாக்கம் வி.பன்னீர்செல்வம்
மாணவர் அணி மாவட்டச் செயலாளர் அருண், ஓசூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் ராஜு, ஓசூர் வடக்கு பகுதி கழக செயலாளர், மாமன்ற உறுப்பினர் M.அசோகா, பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ஓசூர் மாமன்ற உறுப்பினர் கும்மி @ ஹேமகுமார்,ஓசூர் ஒன்றிய கழக செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி, ரவிக்குமார், சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், வேப்பனஹள்ளி ஒன்றிய கழக செயலாளர்கள் சைலேஷ் கிருஷ்ணன், ராமமூர்த்தி, கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், முன்னாள் சேர்மன் சசி வெங்கடசாமி, ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன்,ஓசூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு, முன்னாள் கவுன்சிலர் முரளி, மாவட்ட துணை செயலாளர் அலமேலு,தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மண்டல இணைச் செயலாளர் சரவணக்குமார், மாவட்ட துணை தலைவர்கள் பிரசன்னா, அம்ரிஷ், கிரண் நாயுடு,கழக நிர்வாகி பிரசாந்த், சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி முபாரக், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர இணை செயலாளர் ராஜா வாசு, ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ,,கழக நிர்வாகி மூர்த்தி,
உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஜி.பி.மார்க்ஸ்
ஓசூர் செய்தியாளர்