தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையத்தில் தினேஷ் என்பதை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது சகோதரிகள் மேனகா மற்றும் கிருத்திகா இருவரும் காவல் நிலையம் முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில் கடந்த ஒன்பதாம் தேதி கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 9 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,
தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குனர் டாக்டர்.ரவிவர்மன் நடுக்காவேரி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

பின்னர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.