Friday, June 12, 2026
No menu items!
HomeUncategorizedதொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா'...

தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட ‘இன்ஸ்டா’ உத்தரவு!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின், அக்கட்சியின் ஒவ்வொரு எம்எல்ஏ-க்களும் 2 கேமரா மென் மற்றும் ஒரு வீடியோ எடிட்டரை தங்களின் அலுவலகங்களில் பணிக்கு சேர்த்துள்ளனர். எம்எல்ஏ-க்கள் அனைவரும் தாங்கள் செய்யும் பணிகளை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக எடுத்து போட வேண்டும் என்பதே தவெக தலைமையின் உத்தரவு, இந்த நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), நிர்வாகத்திலும் மக்கள் தொடர்பிலும் புதுமையான மற்றும் நவீன உத்திகளைப் புகுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அன்றாட மக்கள் பணிகள் மற்றும் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தவெக தலைமையின் பிரத்யேக உத்தரவின் பேரில், அக்கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களும் தங்களின் அலுவலகங்களில் தலா இரண்டு கேமராமேன்கள் மற்றும் ஒரு வீடியோ எடிட்டரை பணியில் சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. பாரம்பரிய அரசியல் பாணியை மாற்றி, தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே இந்த டிஜிட்டல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ-க்கள் தொகுதிக்குள் ஆய்வுக்குச் செல்வது, மக்களின் குறைகளைக் கேட்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் துல்லியமாகப் பதிவு செய்ய இந்த 2 கேமராமேன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படும் காட்சிகளைத் தொய்வில்லாமல், சுவாரஸ்யமான செய்தியாக மாற்றி, சமூக வலைதள வடிவத்திற்கு ஏற்பத் தொகுக்க ஒரு தொழில்முறை வீடியோ எடிட்டரும் ஒவ்வொரு எம்.எல்.ஏ அலுவலகத்திலும் முழுநேரமாகப் பணிபுரியத் தொடங்கியுள்ளார். “எம்.எல்.ஏ-க்கள் செய்யும் நற்பணிகள், திட்டங்களின் நிலவரங்கள் அனைத்தும் பொதுமக்களுக்குத் வெளிப்படையாகத் தெரிய வேண்டும்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் வீடியோக்களாகவும் ரீல்ஸ்களாகவும் இவற்றைத் தொடர்ந்து பதிவிட வேண்டும் என்பதே தவெக தலைமையின் உத்தரவாகும். அறிக்கைகளையும், மேடைப் பேச்சுகளையும் தாண்டி, களத்தில் நடக்கும் வேலைகளை நேரடியாகத் திரையில் காட்டுவதுதான் உண்மையான வெளிப்படைத்தன்மை என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது.

சில இடங்களில் இந்த கேமராமேன்களின் பணிகள் செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களையே கொந்தளிக்க வைக்கிறது. பல்வேறு தொகுதிகளிலும் செய்தியாளர்களுக்கும் இந்த கேமரா மேன்களுக்கும் மோதல் ஏற்படும் சூழலும் உருவாகி வருகிறது. இதனால் வரும் காலங்களில் தவெகவினரின் இந்த செயல்பாடுகளே, பிரச்சனைகளுக்கும் காரணமாக மாறக்கூடும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version