Monday, May 20, 2024
No menu items!
Google search engine
HomeUncategorizedயார் அதிக பயணிகளை ஏற்றுவது தஞ்சையில் நடுரோட்டில் கட்டி பிரண்ட அரசு பேருந்து மற்றும் தனியார்...

யார் அதிக பயணிகளை ஏற்றுவது தஞ்சையில் நடுரோட்டில் கட்டி பிரண்ட அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள்.

பயணிகளை யார் அதிகமாக ஏற்றுவது என்ற போட்டியில் ஏற்பட்ட தகராறில் நடு ரோட்டில் அரசு பேருந்து நடத்துனரை ஓட ஓட விரட்டி தாக்கிய தனியார் பேருந்து ஒட்டுனர் நடத்துனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில பரவி வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் பயணிகளை ஏற்றி கொண்டு

5 நிமிடம் இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.

வரும் வழியில் உள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே போட்டி நிலவி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தஞ்சை தொம்பன் குடிசை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நின்று பயணிகளை இறக்கி விட்டுள்ளது.

அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்தை வழி மறித்து நிறுத்தி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி வந்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது சமாதானம் படுத்திய அரசு பேருந்து நடத்துனரை தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் விரட்டி சென்று நடுரோட்டில் வைத்து தாக்கி உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments