HomeUncategorizedதிருச்சி லாட்ஜில் தனியாக அறை எடுத்து தங்கி போதை ஊசி போட்டுக் கொண்டு உல்லாசமாக இருந்த...

திருச்சி லாட்ஜில் தனியாக அறை எடுத்து தங்கி போதை ஊசி போட்டுக் கொண்டு உல்லாசமாக இருந்த போது காதலி உயிரிழப்பு; காதலன் கைது..!

திருச்சி அரியமங்​கலம் உக்​கடை பகு​தி​யைச் சேர்ந்​தவர் சதாம் உசேன் (19). இவருக்​கு 17 வயது சிறுமி​யுடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இரு​வருக்கும் போதை ஊசி போடும் பழக்​கம் இருப்பதாக கூறப்​படு​கிறது.இந்​நிலை​யில், இவர்​கள் இரு​வரும் தம்பதி என தெரி​வித்து நேற்று முன்தினம் மத்​திய பேருந்து நிலை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் விடு​தியில் அறை எடுத்து.தங்​கி​யுள்ளனர் பின்​னர்,நேற்று மாலை அறை​யில் இருந்து பதற்​றத்​துடன் வெளியே வந்த சதாம் உசேன், தனது மனைவி கட்​டிலில் இருந்து கீழே விழுந்து மயங்​கி​விட்​டார் என தெரி​வித்​துள்​ளார்.இதையடுத்​து, அந்​தச் சிறுமியை திருச்சி அரசு மருத்​து​வ​மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், சிறுமி உயிரிழந்​து​விட்​டதாக தெரி​வித்​தனர்.இது தொடர்பாக தகவலறிந்த கன்​டோன்​மென்ட் விடுதிக்குச் சென்று சிறுமியின் உடலை கைப்​பற்றினர். விடு​தியில் சோதனை நடத்​தி​ய​போது, போதை மாத்​திரைகள் கைப்​பற்​றப்​பட்​டன. போலீ​ஸார் வழக்​குப் பதிந்து, சதாம் உசேனிடம் விசாரித்து வரு​கின்​றனர்.போதை கலாச்சாரம் இன்னும் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடையே பரவி உள்ளது.விரைவில் தவெக அரசு போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிடில் இளைய தலைமுறை போதையின் பிடியில் சிக்கிவிடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here