Thursday, March 13, 2025
No menu items!
HomeUncategorizedகங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு அரசு சிலை அமைக்க தவறினால் போராட்டம் நடத்தி சிலை அமைப்போம்....

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு அரசு சிலை அமைக்க தவறினால் போராட்டம் நடத்தி சிலை அமைப்போம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி தலைவர் இளையராஜா இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையர் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கங்கை வரை படையெடுத்து கடாரம் வரை வென்று வரலாற்று சிறப்புமிக்க தலைவன் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் திருவுருவச் சிலை இல்லை. அவருக்கு உருவம் இல்லை என அமைச்சர் கூறுவது சரியல்ல. திருவள்ளுவருக்கு எப்படி உருவமில்லாமல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறதோ அதே போன்று மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கோயில் வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும். அரசு சிலை அமைக்கத் தவறினால் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஒன்றிணைந்து 120 அடி உயரத்தில் சிலை அமைப்போம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், வருகின்ற சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது, அப்போதைய சூழலை ஒப்பிட்டு எங்களுடைய கூட்டணி அறிவிப்பை முறையாக அறிவிப்போம். பெரியாரைப் பற்றி சீமான் பேசுவது அழகல்ல, அவர் அது போன்று பேசுகிறார் என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version