Sunday, June 1, 2025
No menu items!
HomeUncategorizedமதுரை, மேலூர் கல்லங்காடு சிப்காட் திட்டத்தை எதிர்த்த போராட்டத்திற்கு தடை.

மதுரை, மேலூர் கல்லங்காடு சிப்காட் திட்டத்தை எதிர்த்த போராட்டத்திற்கு தடை.

ஒரு வாரம் முன்பே அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில், முந்தைய நாள் நள்ளிரவு பொருந்தா காரணங்களைக் கூறி, கல்லங்காடு பகுதியில் சிப்காட் அமைவதை கண்டித்த போராட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

“இன்று தமிழர் எழுச்சிக் கழகம் சார்பில் (27-04-2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா. முகிலன் உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கத்தினரும் பங்கேற்க இருந்த, வஞ்சிநகரம் கல்லங்காடு பகுதியில் சிப்காட் அமைப்பதை கண்டித்த ஆர்ப்பாட்டத்திற்கு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்துள்ளனர். இதை தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கனிமக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று போராட்டக் குழுவினர் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் தெரிவித்து உள்ளனர்க்ஷ

வ. வரதராஜன்,
மேலூர் செய்தியாளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version