முன்னாள் மத்திய அமைச்சரும் பொருளாதார மேதையுமான ப .சிதம்பரம் அவர்களின் 80வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் ராமநாதன் தலைமையில் மாணிக்கவேல் கேடி பிச்சமுத்து ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில பேச்சாளர்சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் மார்க்கெட் கோட்டத் தலைவர் சம்சுதீன் மார்க்கெட் மாரியப்பன் நிர்மல் குமார் மல்லியம்பத்து தனசேகர், சிங்காரவேல் , இளைஞர் காங்கிரஸ் லியோ கௌதம், ராஜு, கோகுல் குமார், பாலு ,செந்தில் முருகன், உறையூர் விஜி, சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து பொன்மலை பட்டியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது.