Wednesday, February 5, 2025
No menu items!
HomeUncategorizedஓசூரில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37-வது நினைவஞ்சலி

ஓசூரில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37-வது நினைவஞ்சலி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களின் அறிவுறுத்தலின்படி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய சத்துணவு தந்த புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜுஜூவாடி 1-வது மற்றும் 2-வது வார்டு அதிமுக சார்பாக

ஓசூர் மாநகர வடக்கு பகுதி கழகச் செயலாளர், நகர அமைப்பு குழு தலைவர், 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் . M.அசோகா அவர்களின் தலைமையிலும்,

ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கல்வி அமைப்புக்குழு தலைவர், 2-வது வார்டு மாமன்ற உறுப்பினர் H.ஸ்ரீதர் அவர்களின் தலைமையிலும்

கிருஷ்ணகிரி அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் . J.M.சீனிவாசன் ஆகியோரின் தலைமையிலும்,

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், மௌன அஞ்சலி செலுத்தி வணங்கினர்.

இந்நிகழ்ச்சியில் 1-வது வார்டு வட்டச் செயலாளர் திரு நாகிரெட்டி, 1-வது வார்டு அவைத்தலைவர் லட்சுமண பாபு, 2-வது வார்டு அவைத் தலைவர் தனசேகர், ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர். V.ராஜா வாசு, தகவல் தொழில் நுட்ப பிரிவு பொறுப்பாளர் மாதேஷ், வார்டு பொருளாளர் திரு.சந்திர மோகன், மேலமைப்பு பிரதிநிதி சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர்கள், மஞ்சுநாத், சிவராஜ், ராஜப்பா, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், பிரகாஷ், மகளிர் அணியினரும், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

G.B. மார்க்ஸ்
ஓசூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version