ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் 2.10.24 இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் செ. ஹெதர் அலி தலைமையில் நடந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பலருக்கு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராடியதால் வழக்கு இருப்பதாக காவல் வழக்கு இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.. குடியுரிமை சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராக போராடியகளின் வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அரசானை வெளியிட கோரிக்கை வைக்கப்பட்டது.உள்ளாட்ச்சி அமைப்புகளில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் அமையும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டு கொள்ளப்பட்டது. தமிழக அரசு கட்டாய நகரமயமாக்குவதை கைவிட கோரிக்கையும், ஊராட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன் நகர் பாலிக்கா சட்டம் நிறைவேற்றவும், சமூகநீதி பேசம் தமிழக அரசு இந்திய சுதந்திரத்திற்க்காக போராடிய இஸ்லாமியர்களின் படங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது