திருச்சி. 25.6.2025 வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்ஃ வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியும் , தர்ணாவும் மாவட்ட ஆட்சி யகரத்தில் தலைவர் பால் பாண்டி தலைமையில் நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் முதன்மை கோரிக்கையான பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை வலியுறுத்தினர். தற்போது ஆளும் அரசு தேர்தலுக்கு முன் அரசு ஊழியர் களுக்கு நியாயமான கோரிக்கைகளை கழக அரசு அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கப்பட்டு நல்ல தீர்வு செய்யப் படும் என வாக்குறுதி அளித்த தற்போதய அரசு எந்த கோரிக்கையும் தற்போது நான்கு வருடங்கள் நிறைவடைந்த பிறகும் வருவாய் துறையினரின் எந்த கோரிக்கையும் நிறை வேற்றவில்லை என உரையாற்றியபோது. தங்களது கண்டன குரலை பதிவு செய்தனர். வருவாய் துறையினருக்கு பணி பாதுகாப்பு மற்றும் கனிம வள கொள்ளையர்களின் கொலை வெறிக் தாக்குதல்.

மற்றும் எவ்வித வேலைக்கும் கால அவகாசம் தராமல் அழுத்தம் கொடுத்து தினம், தினம் மன உளைச்சலுக்கு ஆளாக்கின்றனர். ஊரக வளர்ச்சித் துறை., பொதுப்பணி துறை, கால்நடைத்துறை என அரசு துறை பணிகளும், எங்கள் மீது திணிக்கப்படுகிறது எனவே அரசு எங்களை கரிசனத்தோடு ஆராய்ந்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும், வாரிசு வேலை வழங்க வேண்டும் என்றும் ஆளு கிற அரசுக்கு அனைத்து சங்க பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்.
