திருவையாறு காவல் நிலையத்தில் அணைக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த நபர்கள் மீது பொய்யான கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவையாறு அருகே செம்மங்குடி கிராமத்தில் கடந்த மாதம் ஊர் திருவிழா நடைபெற்றது. ஊர் திருவிழாவிற்கு கணபதி அக்ரஹாரத்தை சேர்ந்த அரசு ஓட்டுநர் ரமேஷ் என்பவர் மாமியார் வீட்டிற்கு திருவிழாவில் பங்கேற்று விட்டு வீடட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது அனைக்குடி மாதா கோவில் தெரு மெயின் சாலையில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வந்ததில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ரமேஷ் உறவினர்கள் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கொலை செய்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தி கொலை வழக்காக பதிவு செய்த பின்பு ரமேஷ் உடலை வாங்கி சென்றார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்து திருவையாறு தேரடி திடலில் விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்கள் விபத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர் இதில் நூற்றுக்கணக்கானோர் ஆண்கள் பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விபத்து வழக்கை கொலை வழக்கு பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கொலை வழக்கை ரத்து செய்து விபத்து வழக்காக பதிவு செய்ய வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் குடிபோதையில் சென்று கீழே விழுந்ததில் மரணம் அடைந்துள்ளார் அவற்றை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையை கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பி தேரடி வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

பொய்யான கொலை வழக்கை ரத்து செய்து விபத்து வழக்காக பதிவு செய்ய வேண்டும் மாதா கோவில் தெருவில் வசிக்கும் குடும்பத்தார்கள் அச்சுறுத்தல் இல்லாமல் நடமாட தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரவீன் குமார் த/பெ சௌந்தர்ராஜன் ராம்குமார் த/பெ முருகேசன் நவீன் குமார் த/பெ முருகேசன் ஆகியோர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்வில் முன்னாள் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் என் டி இடி முரசு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், அரசு வணங்கா முடி, இளங்கோ, செந்தில் சிலம்பரசன், ரமேஷ்,நாகத்தி வினோத்,பசுபதி வளவன், சத்யராஜ், அழகா அம்பிகாபதி, வேலு யோகானந்தம், செந்தில் வளவன், நகரச் செயலாளர் பாபநாசம் யோவான், ஒன்றிய துணைச் செயலாளர் விக்கி வளவன், மனோஜ்பட்டி ஜெயபால், சிறுத்தை சீனா, புலவர் செங்கோடன், மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர் பூதலூர் மலர்க்கொடி,திருவையாறு ஜோதி கார்த்திக், தஞ்சை மேற்கு ஜீவா, பாபநாசம் கிழக்கு மணிமேகலை, தஞ்சை மேற்கு ராணி, மற்றும் பெருந்திரளான விடுதலைச் சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக திருவையாறு நகர செயலாளர் ஜெயம் கார்த்தி நன்றியுரை வழங்கினார்.