12-05-2025 முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை..
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சருமான திரு. P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
ஓசூர் மாநகர அதிமுக வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.M.அசோகா அவர்களின் தலைமையில்..
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடி நுழைவாயிலில் பொதுச் செயலாளர் அவர்களின் பிறந்தநாளை கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது..

இந்நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு.H.ஸ்ரீதர் அவர்களும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் திரு. J.M. சீனிவாசன் அவர்களும்,
1-வது வார்டு கழக வட்டச் செயலாளர் திரு.நாகிரெட்டி, கழக நிர்வாகிகள் திரு.மாதேஷ்,. திரு.குமார், திரு.சந்திரசேகர், திரு. அன்பரசு, திரு. மாதவன், திரு. மஞ்சுநாத், திரு. சிவராஜ், திரு.ராஜப்பா, மகளிர் அணியினர், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடினர்.

ஜிபி.மார்க்ஸ்
செய்தியாளர் ஓசூர்