11-05-2025 கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் அண்ணா தொழிற்சங்க பேரவை இணைந்து நடத்திய ரத்ததான முகாமை
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் துவக்கி வைத்து அவரும் ரத்ததானம் செய்தார்.
அவருடன் அதிமுக கழக நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவினரும், அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களும் பொதுமக்களும் என 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்,
ரத்த தானம் செய்தவருக்கு அதிமுக சார்பில் சான்றிதழ்களும் ஊட்டச்சத்து பழங்களையும் மாவட்டச் செயலாளர் வழங்கினார்.

ஜிபி.மார்க்ஸ்
ஓசூர் செய்தியாளர்