`சிபிஐ விசாரணை தேவையில்லை; லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம்!’- இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

0

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கு சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. 2018ல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 4800 கோடி ரூபாய் அளவிற்கு நெடுஞ்சாலை துறை டெண்டரில் முறைகேடு நடந்தாக எடப்பாடிக்கு எதிராக ஆர். எஸ் பாரதி புகார் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பின் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே இல்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. இதையடுத்து வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்தார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here