கும்பகோணம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த. இரட்டை கொலை சம்பவத்திற்கு இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததால் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார், இந்த கொலை நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு புகார் இருதரப்பிலும் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில்

கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இதனை விசாரிக்காமல் காலம் தாழ்த்தி இரு தரப்பையும் மதிக்காமல் இருந்திருக்கிறார் ஆய்வாளர் ரேகாராணி, புகார் அளித்தும் பலன் இல்லாமல் போனதால் கடுப்பாகிப் போன அந்த இரு தரப்பினரும் மோதல் போக்கு அதிகமாகி கொலை சம்பவமாக மாறியுள்ளது. அதுவும் கொலை செய்யப்பட்டவர் வழக்கறிஞர் என்பதால் பரபரப்பு அதிகரித்து உள்ளது. சஸ்பெண்ட் நடவடிக்கையால் தஞ்சை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


